Monday, September 29, 2025

மனம் என்னும் மாயையை

இப்பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் ஒருவகை பாசத்தின் வெளிப்பாடே ஆகும்.

ஒருவரை நாம் அதிகம் நேசிக்கின்றோம் என்றால் அந்த நேசிப்பானது மென்மையான தாகவும் இருக்கலாம் முரட்டுத்தனமாகவும் இருக்கலாம்.

இந்நிலையை மேலோட்டமாக பார்க்கும் பொழுது பிரச்சினைகளால் பிரிந்து விடுகிறோம்.

பல நிகழ்வுகளை உள்ளார்ந்து பார்க்கும் பொழுது தான் புரிகிறது உண்மையான அன்பினால் நிகழ்ந்த மூர்க்கத்தனமான போராட்டம் என்பது.

மனதில் வருத்தம் மேலோங்கி இருப்பதாலும் ஒருவித செருக்கினாலும் தான் என்ற அகந்தை முன்நிற்கும் அப்போது தன் மனம் எதையும் ஏற்காது அதனால் பல பல பின்விளைவுகளை சந்திக்கின்றோம்.

எப்போது நாம் உள்ளார்ந்து பார்க்கின்றோமோ அப்போது நம் மனநிலை அமைதியாக இருந்தால் அது அன்பின் வெளிப்பாடாகவும்.

அதுவே மூர்க்கத்தனமாக இருந்தால் உயிரையே இழக்கும் அல்லது உயிரையே எடுக்கும் சூழ்நிலைக்கு அழைத்துச் சென்றுவிடும்.

அதனால்தான் நம் முன்னோர்கள் அதீத மகிழ்ச்சியாக இருக்கும் போதோ அல்லது அதீத கோபமாக இருக்கும் போதோ எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். அமைதியாக இருக்கும்போது மட்டும் ஆழ்ந்து சிந்தித்து முடிவுகளை எடுக்க அறிவுரித்தினர்கள்.

இது மனதில் ஏற்படும் நூலிழை மாற்றங்களே இதை புரிந்து கொண்டால் எங்கும் எப்போதும் அன்பும், அமைதியும் நிலைத்திருக்கும்.

இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் நலமும், வளமும் பெற்று இன்பமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். 

Friday, September 26, 2025

மகாசிவராத்திரி

ஓம் சிவாய நம !


மகா சிவராத்திரி


இந்துக்களால் மிகப்கொபெரிய அளவில் கொண்டாடப்படும் விரதங்களில் சிவனுக்குரிய மிகஉண்ணதமான மிகமுக்கியமான விரதமாக இவ்விரதம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.


மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் நான்கு ஜாமமாக அபிஷக, ஆராதணைகளுடன் மிகசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஹேவிளம்பி ஆண்டு மாசி மாதம் 1-ம் நாள் (13-02-2018) செவ்வாய்க்கிழமை அன்று பல சிறப்புமிக்க மகா சிவராத்திரியானது வருகிறது. இன்னன்நாளில் எல்லாம் வல்ல எம்பெறுமானை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோமாக.

ஓம் நமசிவாய !

முதல் ஜாமம் முதல் நான்காம் ஜாமம் வரை
நாம் கடைைபிடிக்க வேணண்டிய வழிமுறைகள்

முதல் ஜாமம் :

வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்
அபிஷேகம் - பஞ்சகவ்யம்
அலங்காரம் - வில்வம்
அர்ச்சனை - தாமரை, அலரி
நிவேதனம் - பால் அன்னம்,சக்கரைபொங்கல்
பழம் - வில்வம்
பட்டு - செம்பட்டு
தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம்
மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை
ஒளி - புட்பதீபம்

இரண்டாம் ஜாமம் :

வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
அலங்காரம் - குருந்தை
அர்ச்சனை - துளசி
நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் - பலா
பட்டு - மஞ்சள் பட்டு
தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
மணம் - அகில், சந்தனம்
புகை - சாம்பிராணி, குங்குமம்
ஒளி - நட்சத்திரதீபம்

மூன்றாம் ஜாமம் :

வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
அபிஷேகம் - தேன், பாலோதகம்
அலங்காரம் - கிளுவை, விளா
அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
நிவேதனம் - எள்அன்னம்
பழம் - மாதுளம்
பட்டு - வெண் பட்டு
தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
புகை - மேகம், கருங் குங்கிலியம்
ஒளி - ஐதுமுக தீபம்

நான்காம் ஜாமம் :

வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் - கரு நொச்சி
அர்ச்சனை - நந்தியாவட்டை
நிவேதனம் - வெண்சாதம்
பழம் - நானாவித பழங்கள்
பட்டு - நீலப் பட்டு
தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
புகை - கர்ப்பூரம், இலவங்கம்
ஒளி - மூன்று முக தீபம்

வானத்தில் கண்ட காட்சி

25/09/2025 இன்றைய காலைப்பொழுதில் வானில் கிடைத்த அழகான காட்சி 

Vallalar Vazhipadu

Tuesday, December 26, 2017

’எங்க உயிரை கொடுத்தாவது இங்கு மதுக்கடை வராமல் தடுப்போம்!' - கொந்தளிக்கும் கிராம மக்கள்

Salem: 

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மதுக்கடைகளைக் கிராமத்துக்குள் கொண்டு வந்து கிராம மக்களின் கலாசாரம், பண்பாட்டையும் கெடுத்து கிராமப்புற பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்க முயல்கிறார்கள். அதை, எங்கள் உயிர் போனாலும் அனுமதிக்க மாட்டோம் என்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு கிராமத்தின் பிரதிநிதிகளாக 15 பேர் வந்திருந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்களிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.
இதுபற்றி வெங்கடசாமி, ''நாங்க ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகா குலவபாளையம் பஞ்சாயத், மொட்டணம் கிராமத்திலிருந்து வந்திருக்கிறோம். எங்க கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தில் எந்தவித கலாசார சீரழிவும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். நம்பியூரில் டவுன் பகுதியில் ரோட்டோரமாக 2 டாஸ்மாக் கடைகள் இருந்தன.
அந்த ரெண்டு கடைகளும் சாலையோரத்தில் கடைகள் இருக்க கூடாது என்பதால் அந்தக் கடைகளை மூடிவிட்டார்கள். அதில் ஒரு கடை எங்க கிராமத்தில் உள்ள மேட்டுக்கடை பகுதியில் திறப்பதற்கான அனைத்து வேலைகளும் செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கான கட்டடங்களைக்கூட கட்டிவிட்டார்கள். இந்த இடத்தில் மதுக்கடை வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஏற்கெனவே மது அருந்தி உயிரிழந்தவர்கள், மதுவால் வாழ்க்கை இழந்தவர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். மது குடிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களை சார்ந்து வாழக்கூடியவர்களும் ஆபத்து நிகழ்கிறது.

Vallalar